சென்னை, ஜூன் 11 –
தென்னிந்தியா முழுவதும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பயன்பாட்டை ஊக்குவிக்கும் முயற்சிகளை விரைவுபடுத்த என்.எஸ்.இ.எஃப் .ஐ (NSEFI ) சென்னையில் தனது தென் மண்டலக் குழுவை அமைத்துள்ளது. இதற்கான தொடக்க விழா சென்னையில் நடைபெற்றது. இதில் தூய எரிசக்தித் துறையைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் ஒன்றிணைந்தனர்.
இந்தியாவின் தூய எரிசக்தி முன்னெடுப்புகளை வழி நடத்துவதில் ஒரு தசாப்தத்திற்கும் மேலான , புது தில்லியைத் தலைமையிடமாகக் கொண்ட பொது அறக்கட்டளையாக செயல்படும் முன்னணி எரிசக்தி கொள்கை மற்றும் ஆதரவு அமைப்பே ‘நேஷனல் சோலார் எனர்ஜி ஃபெடரேஷன் ஆஃப் இந்தியா’ (NSEFI) ஆகும். 2013-ல் என்.எஸ்.இ.எஃப்.ஐ யை (NSEFI) உருவாக்கத் துறையின் முக்கியப் பிரமுகர்களை ஒன்றிணைப்பதில் மறைந்த என்.எஸ்.இ.எஃப். ஐ முன்னாள் தலைவர், பிரணவ் ஆர். மேத்தா, ஸ்வெலெக்ட் எனர்ஜி சிஸ்டம்ஸ் துணைத் தலைவர் மற்றும் முழுநேர இயக்குநர், ஆர். செல்லப்பன் மற்றும் ஹீரோ ஃபியூச்சர்ஸ் சி.இ.ஓ சுனில் ஜெயின் ஆகியோர் முக்கியப் பங்காற்றினர்.
புதிதாக நிறுவப்பட்ட துணை அமைப்பான என்.எஸ் இ.எஃப் .ஐ என்கிற நிலையான எரிசக்தித் துறை கூட்டமைப்பு மூலம், சென்னையில் தலைமையிடமாகக் கொண்ட தனது தெற்கு மண்டலக் குழுவின் அதிகாரப்பூர்வத் தொடக்கத்தை அறிவித்தது. இது தமிழ்நாடு, கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களில் கார்பன் வெளியேற்றத்தைக் குறைப்பதற்கான முயற்சிகளை முன்னெடுப்பதில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமைகிறது.
இதில் மத்திய மற்றும் மாநில அரசுகளின் உயர்மட்ட பிரமுகர்கள் இதில் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர். தென்னிந்தியாவின் ஐந்து மாநிலங்களிலும் சூரிய ஆற்றல், காற்றாலை ஆற்றல், ஆற்றல் சேமிப்பு, பசுமை ஹைட்ரஜன் மற்றும் பிற வளர்ந்து வரும் தூய எரிசக்தி தொழில்நுட்பங்கள் தொடர்பான கொள்கை ஆதரவு மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு, மாநில அரசுகளுக்கு விரிவான அறிவுசார் ஆதரவு மற்றும் வழக்கமான தொழில்சார் கருத்துக்களை வழங்குவதற்காக இந்தக் குழு அமைக்கப்பட்டுள்ளது.


