தூத்துக்குடி, மார்ச் 7 –
தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் ரூ.136 கோடி மதிப்பீட்டில் புதிய மருத்துவமனை கட்டிடத்தை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.
தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று காலை 9.30 மணிக்கு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் ரூ.136 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள உயர் சிறப்பு மருத்துவமனை கட்டிடத்தினை திறந்து வைத்தார். பின்னர் காலை 10.00 மணிக்கு தருவை மைதானத்தில் நடைபெற்ற அரசு விழாவில் 3958பயனாளிகளுக்கு ரூ.110,66,34,447 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி விழாப் பேருரையாற்றினார்.



