திருச்சி, ஜூன் 26 –
திருச்சி மாவட்டம் திருவரம்பூர் கோட்டம் துவாக்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அரசு மாதிரி பள்ளியில் போதை எனக்கு வேண்டாம் நமக்கு வேண்டாம் என்ற முழக்கத்தை முன்வைத்து பள்ளி பருவத்தில் மாணவர்கள் போதைக்கு அடிமையாக வேண்டாம் என்பதை எடுத்துரைத்து போதைப் பொருட்கள் என்னென்ன அதனை பயன்படுத்துவதனால் உடலுக்கு என்ன தீங்கு ஏற்படுகிறது சமுதாயத்தில் என்ன மாற்றம் நிகழ்கிறது வளரும் சமுதாயம் எப்படி சீரழிகிறது என்பதை பற்றி முழு விளக்கமாக எடுத்துரைத்து பள்ளி குழந்தைகள் போதை பொருளிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தி துவாக்குடி காவல் நிலைய உதவியாளர் நாகராஜ், மாதிரி பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் மாதிரி பள்ளி சிறுவர் சிறுமிகருடன் போதைப்பொருள் ஒழிப்பு சம்பந்தமான பதாகையில் நின்று புகைப்படம் எடுக்கப்பட்டு விழிப்புணர்வு செய்யப்பட்டது.



