கிருஷ்ணகிரி, ஆக. 4 –
தஞ்சையில் நடந்த திமுக ஆர்ப்பாட்டத்தில், தமிழக முதல்வர் குறித்து சர்ச்சைக்குரிய பேசியதாக எதிர்கட்சி தலைவர் உதயநிதியை கண்டித்து, தவெகவினரும், உதயநிதி கைதை கண்டித்து திமுகவினரும் கிருஷ்ணகிரியில் போட்டி போட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், மாவட்ட முழுவதும் மறியல். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 750 திமுகவினர் கைது செய்யப்பட்டனர்.
மேகதாது அணை விவகாரம் மற்றும் காவிரி நீர் பிரச்னையை முன்னிறுத்தி தஞ்சையில் திமுக சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. கட்சியின் இளைஞரணி செயலாளரும் சட்ட சபை எதிர்க்கட்சி தலைவருமான உதயநிதி தலைமை வகித்து பேசுகையில், முதல்வர் விஜய் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக எதிர்ப்பு கிளம்பியது.
இந்நிலையில் அவரை இன்று சென்னையில் போலீசார் கைது செய்தனர். உதயநிதி கைதை கண்டித்து மாநிலம் முழுவதும் திமுகவினரும், முதல்வர் விஜயை அவதூறாக பேசியதை கண்டித்து தவெகவினரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கிருஷ்ணகிரி ஐந்துரோடு ரவுண்டானாவில் முன்னாள் மாவட்ட செயலாளரும், திமுக மாநில அமைப்புசாரா ஓட்டுரணி செயலாளர் செங்குட்டுவன் தலைமையில் நகர பொறுப்பாளர்கள் அஸ்லம், வேலுமணி, ஒன்றிய செயலாளர்கள் தனசேகரன், மகேந்திரன், கோவிந்தன், பாலாஜி, பரந்தாமன் உள்பட 53 பேர், காவேரிப்பட்டணம் ஒன்றிய செயலாளர்கள் மகேந்திரன், தேங்காய் சுப்பிரமணி உள்பட 60 பேர், பர்கூர், ஊத்தங்கரை, சூளகிரி, ஓசூர், தேன்கனிக்கோட்டை, வேப்பனஹள்ளி உள்ளிட்ட 22 இடங்களில் ஆர்ப்பாட்டம் மற்றும் மறியலில் ஈடுபட்ட 750 பேர் கைது செய்யப்பட்டு மாலை விடுவிக்கப்பட்டனர்.



