திருப்பூர், மே 27 –
திருப்பூர் தெற்கு சட்டமன்ற அலுவலக திறப்பு விழாவில் பல் சமய நட்புறவுக் கழகத்தின் சார்பாக மாவட்ட தலைவர் ஷாஜஹான் தலைமையில் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் பாலமுருகன் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.
திருப்பூர் மாநகர் மாவட்டத் துணைச் செயலாளர் சகோதரர் குத்புதீன் அவர்களும் பல்சமய நட்புறவுக் கழகத்தின் மாவட்ட பொருளாளர் செல்வகுமார், மாவட்ட இளைஞரணி தலைவர் உசேன், மாவட்டத் துணைத் தலைவர் நூர் முஹம்மத், மாவட்ட இளைஞரணி செயலாளர் சுரேஷ், மாவட்ட இளைஞரணி இணைச் செயலாளர் தங்கராஜ், பல்லடம் ஒன்றிய தலைவர் முகமது அலி, இளைஞர் அணியை சேர்ந்த பிரம்மா, மாணவர் அணி சேர்ந்த பைசல், தவெக 50 வது வார்டு பொறுப்பாளர் கலில் ஆகியோர் உடன் இருந்தனர்.



