தருமபுரி, ஜூலை 13 –
தருமபுரி மாவட்ட ஆட்சியர் சரவணன் ஆலோசனைப்படி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் கபிலன் மற்றும் உணவு பாதுகாப்புத் துறை மாவட்ட அலுவலர் மருத்துவர் கைலாஷ் குமார் ஆகியோர் மாவட்டம் முழுவதும் காவல்துறை மற்றும் உணவு பாதுகாப்பு துறையினர் தீவிரமாக ஆய்வு செய்து தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை மற்றும் நடமாட்டம் குறித்து நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவு பிறப்பித்தனர்.
அதன் ஒரு பகுதியாக பெரும்பாலை காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள், சிறப்பு நிலை காவலர்கள் பெரும்பாலை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் ஆய்வில் பெரும்பாலை அரசு மேல்நிலைப்பள்ளி எதிரில் ஒரு போட்டி கடையில் இருந்த தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு முதல் தகவல் அறிக்கை பதித்து மேல் நடவடிக்கையாக பெரும்பாலை காவல் நிலைய காவல் உதவி ஆய்வாளர் சின்ன மாதன் மாவட்ட உணவு பாதுகாப்பு துறைக்கு பரிந்துரை அடிப்படையில் உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நீதிமன்ற அலுவலர் மருத்துவர் கைலாஷ் குமார் ஆகியோர் அரசு மேல்நிலைப் பள்ளியில் உள்ள பெட்டிக்கடை 14 நாட்களுக்கு இயக்கத் தலைவிதித்ததுடன், உடனடி அபராதம் ரூ. 25,000 விதித்து உத்தரவிட்டார்.
அதனைத் தொடர்ந்து பென்னாகரம் ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் மற்றும் காவல் நிலைய சிறப்பு நிலை உதவி ஆய்வாளர் பூங்காவனம் இணைந்து மேற்படி கடையை அடைத்து கடை உரிமையாளர்களுக்கு உடனடி அபராத ரூ. 25,000 விதித்த சலான் வழங்கி மேற்கொண்டு 14 நாட்கள் கடை இயக்க தடை விதித்த நியமன அலுவலர் உத்தரவு நோட்டீஸ் வழங்கினர். இதனை தொடர்ந்து பெரும்பாலை பேருந்து நிலையம் அருகில் உள்ள மளிகை, குளிர்பானங்கள், பெட்டி பீடா கடைகள் மற்றும் தேநீர், பலகார கடைகளில் ஆய்வு செய்த போது ஒரு மளிகை கடையில் காலாவதியான உணவுப் பொருட்கள் அதன் அருகே மற்றொரு கடையில் உரிய விவரங்கள் இல்லாத தின்பண்டங்கள், அச்சிடப்பட்ட செய்தித்தாள்களில் பலகாரங்கள் வினியோகம் பறிமுதல் செய்யப்பட்டு உடனடி அபராதம் இரு கடை விற்பனையாளர் களுக்கும் தல ரூ. 1,000 விதம் ரூ. 2,000 விதிக்கப்பட்டது.
மேலும் ரோடு ஓர தேநீர் பலகார கடைகளில் திறந்த நிலையில் வைத்திருந்த பலகாரங்களை உரிய முறையில் கண்ணாடி அல்லது கவர் தடுப்பு செய்து மண் ,தூசு, அயல் பொருட்கள் விழாமல் தடுத்து விற்பனை செய்யவும், பலகாரங்கள் செய்யும் சமையல் எண்ணெயும் ஒரு முறைக்கு மேல் பயன்படுத்தாமலும் அதே அச்சிடப்பட்ட செய்தித்தாள்கல் உணவுப் பொருட்கள் வினியோகம் பொட்டலமிடுதல் தவிர்க்க விழிப்புணர்வு செய்யப்பட்டது. விதிமுறைகள் மீறி தொடரும் பட்சத்தில் பறிமுதல் மற்றும் அபராத விதிக்கப்படும் என எச்சரிக்கை செய்யப்பட்டது.
தொடர்ச்சியாக சின்னம்பள்ளி பகுதியில் ஆய்வில் ஒரு பேக்கரியில் தேயிலை தரம் ஆய்வில் கலப்படத் தேயிலை உபயோகம் கண்டறிந்து பறிமுதல் செய்யப்பட்டு அளிக்கப்பட்டது. கடை உரிமையாளருக்கு உடனடி அபராதம் ரூ. 1,000 விதிக்கப்பட்டு எச்சரிக்கையுடன் மேற்படி தேயிலை சப்ளை செய்தவர் விவரம் சேகரித்து தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
உணவு சார்ந்த வணிகர்கள் அனைவரும் உணவு பாதுகாப்பு உரிமை பெற்று வணிகம் செய்திட வேண்டும். அவ்வாறு உணவு பாதுகாப்பு உரிமம் சான்றிதழ் இன்றி இனி வணிகம் செய்தால் ரூ.5,000 உடனடி அபராதம் விதிக்கப்படும் எனவும் முறையாக புதுப்பித்து இருந்தல் வேண்டும் என்று உணவு பாதுகாப்புத்துறையினர் எச்சரித்தனர்.
தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை, பதுக்குதல் மற்றும் உணவு சார்ந்த புகார்களுக்கு உணவு பாதுகாப்பு துறை புகார் எண் : 9444642322 whatsapp அல்லது எஸ் எம் எஸ் மூலம் பொதுமக்கள் தகவல் அளிக்கலாம் என உணவு பாதுகாப்புத் துறையினர் தெரிவித்தனர்.



