கன்னியாகுமரி, ஜன. 29 –
கன்னியாகுமரி சன்னதி தெருவில் பகவதி அம்மன் கோவில் தேவசம்போர்டு நிர்வாகத்துக்கு சொந்தமான கன்னியம்பலம் மண்டபம் அருகில் உள்ள இடத்தில் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த விக்ரம் என்பவர் நடத்தி வந்த கடையின் முன்பக்கத்தை ஆக்கிரமித்து கட்டிடம் கட்டி இருந்தார்.
இந்த ஆக்கிரமிப்பை அகற்ற கோரி மதுரை ஐகோர்ட்டு கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்கும்படி தேவசம்போர்டு நிர்வாகத்துக்கு உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த இந்த கடையின் கட்டிடத்தை நகராட்சி நிர்வாகம் நேற்று ராட்சத ஜே.சி.பி. எந்திரம் மூலம் இடித்து அகற்றும் பணியை மேற்கொண்டது.
இந்த ஆக்கிரமிப்பு அகற்றும் பணி கன்னியாகுமரி கராட்சி ஆணையாளர் கண்மணி, குமரி மாவட்ட கிருக்கோவில்களின் இணை ஆணையர் ஜான்சி ராணி ஆகியோரின் அறிவுரையின் பேரில் நகராட்சி நகரமைப்பு ஆய்வாளர் ஷேக் அப்துல்காதர், சுகாதார ஆய்வாளர் ந்தோணி, பகவதி அம்மன் கோவில் மேலாளர் ஆனந்த் ஆகியோர் முன்னிலையில் அகற்றப்பட்டது. பலத்த பாலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி ந்தது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.



