திருப்பூர் ஆக.17
மாவட்ட கலெக்டர் தா.கிறிஸ்துராஜ் தேசியக் கொடியை ஏற்றிவைத்து போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டாா். தொடா்ந்து, சமாதானத்தை வலியுறுத்தும் வகையில் வெண் புறாக்களையும், மூவா்ண பலூன்களையும் பறக்கவிட்டாா். இதையடுத்து, சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கு பொன்னாடை அணிவித்து கவுரவப்படுத்தினார். பின்னர் மாநகர மற்றும் மாவட்ட காவல் துறையில் சிறப்பாகப் பணியாற்றிய 17 காவலா்களுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ்கள், சிறப்பாக பணிபுரிந்த 89 அரசு அலுவலா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை அவா் வழங்கினாா்.
மேலும், மாற்றுத்திறனாளிகள் நலத் துறை, வருவாய்த் துறை, சிறுபான்மையினா் மற்றும் பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை, ஆதிதிராவிடா் நலத் துறை, வேளாண்மைத் துறை, தோட்டக் கலைத் துறை, தாட்கோ உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சாா்பில் 84 பயனாளிகளுக்கு ரூ. 3 கோடியை 5 லட்சத்து 9 ஆயிரத்து 869 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் வழங்கினாா். இதையடுத்து, பள்ளி, கல்லூரி மாணவா்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
விழாவில், மாநகர போலீஸ் கமிஷனர் லட்சுமி, போலீஸ் சூப்பிரண்டு அபிஷேக் குப்தா, மாவட்ட வருவாய் அலுவலா் கார்த்திகேயன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் மலர்விழி, சாா் ஆட்சியா் சவுமியா, துணை கமிஷனர்கள் ராஜராஜன், சுஜாதா மற்றும் அரசு அதிகாரிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.



