திருப்பூர், ஜூலை 14 –
திருப்பூர் மாநகர் மாவட்ட கழகத்தின் சார்பாக, மாவட்ட கழக அவைத்தலைவரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான வெ.பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு சட்டமன்ற தொகுதி செயல் வீரர்கள் கூட்டம் மற்றும் திருப்பூர் மாநகர் மாவட்ட கழக செயலாளர் வேல்குமார் சாமிநாதன் அறிமுக ஆலோசனை கூட்டத்தில் கோவை புறநகர் தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர் ஜெயராமன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று கடந்த 6 ஆண்டுகளாக திருப்பூர் மாநகர் மாவட்ட கழக செயலாளராக பணியாற்றிட ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து நிர்வாகிகளுக்கும் தனது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்து, கழகத்தின் வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆலோசனைகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.
அதனை தொடர்ந்து, கழக செய்தி தொடர்பாளர் பேராசியர் கல்யாண சுந்தரம் சிறப்புரையாற்றினார். இந்நிகழ்வில், முன்னாள் நாடாளுமன்றஉறுப்பினரும், திருப்பூர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் சிவசாமி, முன்னாள் திருப்பூர் வடக்கு சட்டமன்ற உறுப்பினரும், ஒன்றிய செயலாளருமான கோன். விஜயகுமார், தென்னம்பாளையம் பகுதி கழக செயலாளரும், மாமன்ற எதிர்க்கட்சித் அன்பகம் தெற்கு மத்திய தலைவருமான திருப்பதி, திருப்பூர் பகுதி கழக செயலாளரும், மாமன்ற எதிர்க்கட்சி கொறடாவுமான கண்ணப்பன், மாநில எம்.ஜி.ஆர் மன்ற துணை செயலாளர் பட்டுலிங்கம், மாநில மகளிரணி இணை செயலாளர் கவிதா குணசேகரன், கழக பொதுக்குழு உறுப்பினர் தம்பி மனோகரன், கொங்குநகர் பகுதி கழக செயலாளர் பிகேஎம்.முத்து, முருங்கப்பாளையம் பகுதி கழக செயலாளர் கண்ணன், கோல்டன் நகர் பகுதி கழக செயலாளர் ஹரிஹரசுதன், நல்லூர் பகுதி கழக செயலாளர் குமார், நெருப்பெரிச்சல் பகுதி கழக செயலாளர் நாச்சிமுத்து, 15வேலம்பாளையம் பகுதி கழக செயலாளர் கண்ணப்பன், புதிய பஸ் நிலையம் பகுதி கழக செயலாளர் கனகராஜ், சிறுபூலுவபட்டி பகுதி கழக செயலாளர் தங்கராஜ் கருவம்பாளையம் பகுதி கழக செயலாளர் சிவளா தினேஷ், மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் சிட்டி பழனிச்சாமி, மாவட்ட தொழிற்சங்க செயலாளர் கண்ணபிரான், மகளிர் அணி செயலாளர் சுந்தராம்பாள், மாவட்ட மாணவரணி செயலாளர் சதிஷ், மாவட்ட அமைப்பு சாரா ஒட்டுநர் அணி செயலாளர் மார்க்கெட் சக்திவேல், மாவட்ட நெசவாளர் அணி செயலாளர் ஜெகநாதன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் பிரேம்குமார் மற்றும் வட்டகழக நிர்வாகிகள், மகளிர் அணியினர் பங்கேற்றனர்.



