திருப்பூர், செப். 24 –
திருப்பூர் மாநகராட்சி 25ம் வார்டு சோளிபாளையம் பாட்டையப்பன் நகர் கிழக்குத் தோட்டம் பகுதியில் அதி வேகமாக சென்று வரும் இருசக்கர வாகனங்களால் அப்பகுதியில் உள்ள சிறுவர் சிறுமிகள் விளையாடிக் கொண்டிருக்கும் பொழுது
விபத்துக்கள் ஏற்பட்டு விடுமே என்று அப்பகுதியின் பொதுமக்கள் அச்சமடைந்து
ரோடுகளில் வேகத்தடை அமைத்து வந்தனர். இதனை பொறுத்துக் கொள்ளாத ஒரு தரப்பினர் வேகத்தடை அமைக்கப்பட்ட இடங்களில் சமூகவிரோதிகள் குண்டர்களை அழைத்து வந்து பெண்களிடம் தகாத வார்த்தைகளை பேசி தகராறு செய்து வேகத்தடைகளை அகற்றி உள்ளனர்.
செய்வது அறியாத பெண்கள் அருகிலுள்ள 15 வேலம்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்து நடவடிக்கை எடுக்காமல் இருப்பதை கண்டித்தும் பெண்களுக்கு உயிர் அச்சுறுத்தல்கள் தினசரி இருப்பதாலும் திருப்பூர் மாநகர காவல் ஆணையாளரிடம் சமூகவிரோதிகள் குண்டர்களை உடனே கைது செய்து நடவடிக்கை எடுக்குமாறு அப்பகுதியின் நூற்றுக்கு மேற்பட்ட ஆண்கள் பெண்கள் புகார் மனு அளித்தனர்.



