சிவகங்கை, ஜுன் 14 –
சிவகங்கை மாவட்ட சமூக நலத்துறை மற்றும் இதர நலத்திட்ட சேவைகள் வழங்கும் துறைகளின் சார்பில் வருகின்ற 24.06.2025 அன்று சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக மாவட்ட வளர்ச்சி மன்ற கூட்டரங்கில் திருநங்கைகளுக்கான ஒரு நாள் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது. இம்முகாமில் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த திருநங்கைகள் திருநங்கையர் அடையாள அட்டை, ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, முதலமைச்சரின் மருத்துவக் காப்பீட்டு திட்ட அட்டை மற்றும் ஆயுஷ்மான் பாரத் அட்டை ஆகிய நலத்திட்ட சேவைகளைப் பெற உரிய சான்றாவணங்களுடன் கலந்துகொண்டு பயன்பெறலாம். மேலும், இம்முகாம் தொடர்பான கூடுதல் விபரங்களுக்கு 04575 240426 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு விபரங்கள் பெறலாம் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.