திருச்சி, ஜுன் 16 –
திருச்சி ஏர்போர்ட் திலகர் தெருவைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவர் சுரேஷ், தனது சைக்கிளில் புதுக்கோட்டை நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது, பள்ளி வேன் மோதி பலத்த காயமடைந்தார். அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த மாணவர் குறித்து ஏர்போர்ட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



