திருச்சி, ஜூன் 2 –
துறையூரிலிருந்து கரூர் நோக்கி பால் பாக்கெட்டுகளை ஏற்றிச் சென்ற வேன், சிறுகமணி அருகே ஓட்டுநர் கண் அயர்ந்ததால் எதிரே வந்த கனரக வாகனம் மீது மோதி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் வேன் ஓட்டுநரின் கால் முறிந்தது. சம்பவ இடத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.



