திருச்சி, ஏப். 22 –
திருச்சி இனாம் குளத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பூலாங்குளத்துப்பட்டியில் உள்ள காப்புக்காடு பகுதியில் அழுகிய நிலையில் மூதாட்டி சடலம் கண்டெடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
விசாரணையில் உயிரிழந்தவர் காந்திநகர் பகுதியைச் சேர்ந்த பெருமாள் என்பது தெரியவந்தது. பிரேத பரிசோதனைக்குப் பிறகு, போலீசார் உடலை அவரது உறவினர்களிடம் ஒப்படைத்தனர். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


