நாகர்கோவில், ஜூன் 15 –
நாகர்கோவில் மாநகராட்சி 6 வது வார்டு பள்ளிவிளை, சானல்கரை செல்லும் சாலை குண்டும் குழியுமாக மக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் இருப்பதைக் கண்ட பொது மக்களின் பிரச்சினைகளை அரசின் கவனத்திற்கு எடுத்து செல்வதில் சிறப்பாக பணியாற்றி வரும் பத்திரிகையாளர் ஜாண் புகைபடம் எடுத்து செய்தியாக வெளியிட்டார். அவரின் செய்தி எதிரொலியாக தவெக 6-வது வார்டு செயலாளர் மணிகண்டன் மற்றும் நிர்வாகிகள் செய்தியில் சுட்டிக் காட்டப்பட்ட சாலையை பார்வையிட்டனர்.
மேலும் பல ஆண்டுகளாக நாகர்கோவில் மாநகராட்சியால் கண்டுகொள்ளாமல் இச்சாலை விடப்பட்டதின் விளைவாக இப்பகுதி மக்கள் அனுபவித்து வரும் பல்வேறு வேதனைகளை அப்பகுதி மக்களிடம் கேட்டறிந்து இதனை தமிழக முதல்வரின் கவனத்திற்கு எடுத்து செல்வதாக தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து அப்பகுதி கவுன்சிலர் அனுஷா பிரைட்யிடம் இச்சாலை செப்பனிடப்படாமலும், தார் சாலை வசதி செய்து கொடுக்கப்படாமலும் இருப்பதின் காரணத்தை கேட்டறிந்து அவரிடம் உடனடியாக நடவடிக்கை எடுத்து இப்பகுதி மக்களின் போக்குவரத்திற்காக தார் சாலை அமைத்துக் கொடுக்கவும் கோரிக்கை வைத்தனர்.
பொதுமக்களின் அன்றாட தேவைகளான குடிநீர், சாலை வசதி, சுகாதாரம் போன்றவற்றை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளும், அதிகாரிகளும் கோரிக்கைகள் வைத்தும் கண்டுகொள்ளாமல் இருந்து வந்த நிலையில் பொதுமக்களின் தேவை அறிந்து அவைகளை அரசிற்கும் அரசு அதிகாரிகளின் பார்வைக்கும் கொண்டு சேர்த்து அரசுக்கும் மக்களுக்கும் ஒரு பாலமாக இருந்து செயல்பட்டது மட்டுமல்லாமல் மக்களின் குரலாக ஒலித்த பத்திரிகையாளர் ஜானின் செயல் பல ஆண்டுகளாக கண்டு கொள்ளப்படாமல் விடப்பட்ட குண்டும் குழியுமான சாலையை தமிழ்நாடு அரசிற்கும் அரசு அதிகாரிகளின் பார்வைக்கும் எடுத்துச் சென்றதின் விளைவாக இப்பகுதிக்கு புதிய தார் சாலை கிடைக்க அப்பகுதியை பார்வையிட்டு நடவடிக்கை எடுக்க முயற்சி செய்த தவெக நிர்வாகிகள்.



