திண்டுக்கல்,ஆகஸ்ட் 30 –
புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளியில் ஜூனியர் ரெட்கிராஸ் (JRC) சார்பில் மாணவர்களுக்கான கருத்தரங்க நிகழ்ச்சி திண்டுக்கல் புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளியில் உள்ள போப் பிரான்சிஸ் அரங்கத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு திண்டுக்கல் புனித மரியன்னை மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் அருள்பணி V. ஸ்டீபன் L. பிரகாசம் சே.ச. தலைமை தாங்கினார். இயக்கங்கள் மற்றும் மன்றங்களின் ஒருங்கிணைப்பாளர் அருள்பணி S. தெரஸ்நாதன் சே.ச. முன்னிலை வகித்தார்.
இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினர்களாக (ஓய்வு பெற்ற SP) R.R. ராஜகோபால்சாமி, திண்டுக்கல் கே. கணேசன் & கோ திடக்கழிவு மேலாண்மை நிறுவன ஊழியர்கள்
G. ஜெயக்குமார் ஆகியோர் கலந்து கொண்டு பிளாஸ்டிக் கழிவு பொருட்கள் நீக்கமும் மற்றும் மறுசுழற்சி குறித்து சிறப்புரை ஆற்றினார்கள். திண்டுக்கல் மாவட்ட JRC அமைப்பாளர் சையது அபுதாஹீர் கலந்து கொண்டு முதலுதவி பயிற்சி குறித்து விளக்கம் அளித்தார். திண்டுக்கல் மாவட்ட JRC இணை அமைப்பாளர் S. ஜான் போஸ்கோ கலந்து கொண்டு JRC வரலாறு, JRC பாடல்களை பாடினார்.
பள்ளியின் முன்னாள் மாணவர்கள் இரட்டை வழக்கறிஞர்கள் அஜய் மற்றும் விவேக் ஆகியோர் கலந்து கொண்டு சாலை பாதுகாப்பு விதிகளும் மற்றும் சட்டங்களும் குறித்து கருத்துரையாற்றினார்கள். இந்நிகழ்ச்சியில் பல்வேறு பள்ளிகளில் இருந்து பள்ளி மாணவ, மாணவிகள் சுமார் 50 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். சிறந்த சேவைகளில் சிறப்பாக ஈடுபட்ட மாணவர்களை பாராட்டி பரிசுகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியை JRC ஆலோசகர் A. அமல்ராஜ், JRC உதவி ஆலோசகர் A. அன்பரசன் ஆகியோர் சிறப்பாக ஒருங்கிணைப்பு செய்தார்கள்.



