நிலக்கோட்டை அக்.14
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு காந்திநகரில் வசித்து வரும் பிரபல தனியார் ஹோட்டல் உரிமையாளர் சந்திரன் என்பவர், தேனி மாவட்டம் போடியை சேர்ந்த யோகேஷ் என்பவரின் கும்பளுடன் சேர்ந்து போடி வனப்பகுதியில் கருங்காலி மரக்கட்டைகளை வெட்டி தொடர்ந்து கடத்தி வந்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து மாநில வனத்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் வனத்துறை மதுரை மண்டல அதிகாரி சுரேஷ் தலைமையிலான பறக்கும் படை அதிகாரிகள் கருங்காலி கட்டைகளை விலைக்கு வாங்கும் வியாபாரிகள் போல் போடியைச் சேர்ந்த யோகேஷிடம் தொடர்பு கொண்டு பேசியதை அடுத்து,
அவர் போடி வனப்பகுதியில் வெட்டிய கருங்காலிக் கட்டைகளை வத்தலக்குண்டில் ஒரு பன்னை வீட்டில் இருப்பதாக கூறியதையடுத்து,அக்கும்பலிடம் ரூபாய் ஒரு லட்சம் அட்வான்ஸ் கொடுப்பதாக கூறிய வனத்துறையினர் அதனை நேரில் பார்க்க வருவதாக கூறி வத்தலக்குண்டு காந்திநகரில் உள்ள பங்களாவில் பதுக்கி வைத்திருந்த கருங்காலி கட்டைகளை விலை பேச அதிகாலை வந்துள்ளனர்.
அப்போது பங்களாவை சுற்றி வளைத்த வனத்துறையினர்,
அங்கு விற்பனைக்காக வைத்திருந்த ரூபாய் ஒரு கோடி மதிப்பிலான கருங்காலி கட்டைகள் மற்றும் விலைமதிப்பற்ற ஐம்பொன் பொருட்களை பறிமுதல் செய்தனர், அப்போது தப்பி ஓட முயன்ற போடியைச் சேர்ந்த யோகேஷ் மற்றும் சந்திரனின் டிரைவர் சிவா ஆகிய இருவரையும் போடி வனத்துறையினர். சுற்றி வலைத்து பிடித்து விசாரணைக்காக போடி வனச்சரக அலுவலகம் அழைத்துச் சென்றுள்ளனர்,
மேலும் அதே பங்களாவில் மிகவும் பழமையான கோவில் கலசங்களையும் வனத்துறை பறக்கும் படையினர் கைப்பற்றியதாக தகவல் வெளியாகி அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



