மார்த்தாண்டம், நவ. 8 –
அதன்கோடு பூவ காட்டு விளையைச் சேர்ந்தவர் சோமராஜ் (58). அவரது மகனை மடிச்சல் வெட்டுவிளை வீட்டை சேர்ந்த அபிஷேக் குமார் (30) மற்றும் மடிச்சல் வட்ட விளைச்ச அந்த திலீப் (30 ) ஆகியோர் 1. 1/2 லட்சம் வாங்கிவிட்டு வெளிநாட்டுக்கு அழைத்துச் சென்று ஏமாற்றி உள்ளனர். இந்நிலையில் சம்பத்தன்று மடிச்சல் பகுதியில் வைத்து சோமராஜ்- இது குறித்து தட்டி கேட்டுள்ளார்.
இதனால் இருவரும் சேர்ந்து சோமராஜ்-ஐ தாக்கி காயப்படுத்தி உள்ளனர். இதை அடுத்து சோமராஜ்-ஐ அக்கம் பக்கத்தினர் மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். இது குறித்து கொடுத்த புகாரின் பேரில் களியக்காவிளை போலீசார் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


