கன்னியாகுமரி, செப்.04.
கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை சார்பில் “விபத்தில்லா குமரி” மற்றும் “ஜீரோ ஆக்ஸிடெண்ட்” என்ற நோக்கில் தலைக்கவசம் அணிவது மற்றும் போதைப்பொருள் தடுப்பு குறித்து விழிப்புணர்வு மாரத்தான் நடைபெற்றது. கன்னியாகுமரி அய்யன் திருவள்ளுவர் நூற்றாண்டு நினைவு வளைவில் நடைபெற்ற மாரத்தானை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் ஆர். ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்து, அவரும் பங்கேற்று ஓடினார்.
ஆண்களுக்கு 10 கி.மீ., பெண்களுக்கு 5 கி.மீ. என நடைபெற்ற இந்த மாரத்தானில் காவல்துறை அதிகாரிகள் மட்டுமின்றி பொதுமக்கள், பள்ளி-கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர். போதைப்பொருள் இல்லாத சமூகத்தை உருவாக்கவும், சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
இந்த மாரத்தானில் குலசேகரம் அரமண்ணம் பகுதியைச் சேர்ந்த 3 வயது சிறுமி ரிபக் ஷாலின் விர்ஷா ஆர்வத்துடன் பங்கேற்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். சிறுமியை எஸ்.பி. ஸ்டாலின் பாராட்டி உற்சாகப்படுத்தியதுடன், சிறப்புப் பரிசும் வழங்கினார்.
Meta Description:
கன்னியாகுமரியில் தலைக்கவசம் மற்றும் போதைப்பொருள் தடுப்பு குறித்து நடைபெற்ற விழிப்புணர்வு மாரத்தானில் எஸ்.பி. ஸ்டாலின் பங்கேற்றார். 3 வயது சிறுமியும் ஆர்வத்துடன் ஓடி கவனம் ஈர்த்தார்.



