தருமபுரி, பிப்ரவரி 26 –
தருமபுரி பேருந்து நிலையம் மாற்றப்பட்டதின் காரணமாக பழைய பேருந்து நிலையத்தை சார்ந்து வாழ்ந்து வந்த சிறு மற்றும் குறு வணிகர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தினசரி வர்த்தகம் மிகுந்தளவில் குறைந்துள்ளதால் பல குடும்பங்கள் வாழ்வாதார சிரமத்திற்கு உள்ளாகி உள்ளன. அதேபோல் பொதுமக்கள், மாணவர்கள் மற்றும் முதியவர்களும் புதிய இடம் மாற்றத்தால் தினசரி பயணத்தில் சிரமத்தை எதிர்கொள்கிறார்கள்.
இந்த நிலையை கண்டித்து மற்றும் வணிகர்கள், பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு நியாயமான தீர்வு வழங்க வேண்டும் என்பதற்காக ஒரு நாள் கடையடைப்பு மற்றும் தர்ணா போராட்டம் நடைபெற்றது. இந்த தர்ணா போராட்டத்தில் வியாபாரிகள் பழைய பி. ஆர். ராஜகோபால் கவுண்டர் புறநகர் பேருந்து நிலையத்தில் அனைத்து பேருந்துகளும் வந்து செல்ல வேண்டும். தற்காலிகமாக செயல்பட்டு வரும் பேருந்து நிலையத்தை நிரந்தர பேருந்து நிலையமாக செயல்பட வேண்டுமென்று கோரிக்கை விடுத்தனர்.
இந்த நிலையை மாற்றிடவும் மாவட்ட நிர்வாகம் உடனடியாக இந்த விஷயத்தில் கவனம் செலுத்தி உரிய தீர்வு வழங்க வேண்டுமென வணிகர்கள் சங்கம் கேட்டுக்கொள்கிறது.



