தருமபுரி, ஆகஸ்ட் 04 –
தருமபுரி மாவட்ட தவெக மகளிர் அணி சார்பில் தஞ்சாவூரில் நடைபெற்ற போராட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், பெண்களை இழிவுபடுத்தி பேசியதாக கூறி, தமிழ்நாடு முழுவதும் தவெகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனை தொடர்ந்து தருமபுரி தொலைபேசி நிலையம் அருகே நடைபெற்ற தவெக கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் சிவன் தலைமை தாங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி பெண்களை இழிவுபடுத்தி பேசியதாக கூறி கண்டன முழக்கங்களை எழுப்பியும், உதயநிதி ஸ்டாலின் உருவப்படத்தை காலணியால் அடித்தும், பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்தில் தருமபுரி கிழக்கு மாவட்ட செயலாளர் விஜயகாந்த், மேற்கு மாவட்ட மகளிர் அணி தலைவி சத்யா வீரமணி, கிழக்கு மாவட்ட மகளிர் அணி தலைவி திலகவதி, மாவட்ட இணை செயலாளர் வீரமணி, மாவட்ட இளைஞரணி விமல்ராஜ் மற்றும் மாவட்ட, நகர ஒன்றிய, கிளைகழக நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இறுதியில் நகர செயலாளர் சிட்டி சுரேஷ் நன்றி கூறினார்.



