மார்த்தாண்டம், மே 20 –
கன்னியாகுமரி மாவட்ட பறக்கும் படை தனி வட்டாட்சியர் கெ.எம்.பாரதி தலைமையில், ஓட்டுனர் ஜாண் பிரைட் உள்ளிட்ட பறக்கும் படை குழுவினர் இன்று 20ம் தேதி விளவங்கோடு வட்டார பகுதிகளில் பொது வினியோக திட்ட கடத்தல் தடுப்பு ரோந்து பணி நடைபெற்றது.
அப்போது சந்தேகத்திற்கு இடமாக காரோடு என்ற இடத்தில் வந்து கொண்டு இருந்த தமிழக பதிவெண் கொண்ட சொகுசு காரை நிறுத்தும் படி சைகை காட்டினர். ஆனால் கார் நிற்காமல் அதி வேகமாக மாங்கோடு வழியாக பனச்சமூடு சென்று கேரள மாநிலம் ஒற்றசேகரமங்கலம், நெய்யாற்றின்கரை, விழிஞ்ஞம் வழியாக சுமார் 37 கிலோ மீட்டர் சென்றது.
தொடர்ந்து கேரளாவில் உள்ள முக்காலா என்ற இடத்தில் வைத்து கடத்தல் காரை பிடித்தனர். அப்போது கடத்தல் காரை விட்டு இரண்டு கடத்தல் காரர்கள் தப்பி ஓடி விட்டனர். காரை சோதனை செய்ததில் அதில் சுமார் 2000 கிலோ பொது வினியோக திட்ட அரிசி கேரளா மாநிலத்திர்க்கு கடத்தி செல்ல இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும் இன்று மாங்கோடு பகுதியில் வைத்து தமிழக பதிவெண் கொண்ட மற்றொரு காரை சோதனை செய்ததில் அதில் சுமார் 1000 கிலோ பொது வினியோக திட்ட அரிசி கேரளா மாநிலத்திற்கு கடத்தி செல்ல இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த 3 ஆயிரம் கிலோ ரேஷன் அரிசியை காப்புக்காடு அரசு கிட்டங்கியில் ஒப்படைக்கப்பட்டு,
கடத்தல் வாகனத்தை திருவட்டார் வட்டாட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டது.



