தருமபுரி, ஜூலை 22 –
தருமபுரி நகரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நகராட்சி நிர்வாக இயக்குனரகம் சார்பில் “தூய்மை பணியாளர்கள் மேம்பாட்டு திட்டம்” கீழ் சிறப்பு முகாம் நடைபெற்றது.
இதில் “நம்ம ஊரை சுத்தமா வச்சிருக்க தூய்மை பணியாளர்கள் தான் காரணம். அவங்களுக்கும் அவங்க குடும்பத்துக்கும் தேவையான எல்லா அரசு உதவியும் இன்னைக்கு ஒரே இடத்துல கிடைக்க ஏற்பாடு பண்ணிருக்கோம்.” இந்த நிகழ்சியை நகர்மன்ற தலைவர் லட்சுமி நாட்டான் மாது தொடங்கி வைத்தார்.
இந்த முகாமில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை, தேசிய தொழுநோய் ஒழிப்பு திட்டம் மற்றும் தூய்மை பணியாளர்கள் மேம்பாட்டு திட்டம் உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்பில் சிறப்பு அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன.
இலவச மருத்துவ பரிசோதனை, காப்பீடு, உதவித்தொகை விண்ணப்பம், சுயஉதவி குழு விளக்கம் என பல்வேறு சேவைகள் வழங்கப்பட்டன. தருமபுரி நகராட்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த தூய்மை பணியாளர்கள் தங்கள் குடும்பத்தினருடன் வந்து இந்த முகாமில் கலந்து கொண்டு அவர்களுக்கு தேவையான அனைத்து சேவைகளையும் பெற்று பயனடைந்தனர். பலர் புதிய திட்டங்களுக்கு அங்கேயே விண்ணப்பித்தனர்.
இந்த முகாமில் நகராட்சி ஆணையாளர் மற்றும் நகராட்சிதுறை அதிகாரிகளும், தூய்மை பணியாளர்கள் மற்றும் குடும்பத்தினர்கள் கலந்து கொண்டனர். தூய்மை பணியாளர்களின் வாழ்வை மேம்படுத்தும் நோக்கில் நடத்தப்பட்ட இந்த முகாம் அவர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.



