களியக்காவிளை, பிப். 9 –
தமிழக கேரள எல்லைப் பகுதி வழியாக தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு ரேஷன் அரிசி மற்றும் மானிய மண்ணெண்ணெய் மற்றும் ரேஷன் பொருள்கள் கடத்துவது தொடர் கதையாக நடந்து வருகிறது.
இந்த நிலையில் விளவங்கோடு வட்ட வழங்கல் அதிகாரி அனிதா குமாரி தலைமையில் வருவாய் ஆய்வாளர் மைக்கேல் ஆகியோர் கொண்ட குழு, நட்டாலம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தது. அப்போது சந்தேகத்துக்கு இடமாக வந்த டெம்போவை நிறுத்துமாறு சைகை காட்டினர். ஆனால் அந்த டெம்போ நிற்காமல் சென்றது.
இதனை பின் தொடர்த்து துரத்தியநிலையில் காரை நேசர்புரம் பகுதியில் சாலையின் ஓரத்தில் நிறுத்திவிட்டு ஓட்டுனர் தப்பி ஓடிவிட்டார். தொடர்ந்து டெம்போவை சோதனை செய்த போது அதில் படகுகளுக்கு பயன்படுத்துகின்ற மானிய விலை வெள்ளை மண்ணெண்ணெய் 900 லிட்டர் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அப்போது ஓட்டுநர் தப்பி ஓடிவிட்டார்.
வாகனம் மற்றும் மண்ணெண்ணையை பறிமுதல் செய்த அதிகாரிகள், மண்ணெண்ணையை இனயம் மீனவர் கூட்டுறவு சங்கத்தில் ஒப்படைத்தனர். காரை விளவங்கோடு தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில் அதனை கேரளாவிற்கு கடத்தி செல்வது தெரிய வந்தது தப்பி ஓடிய டிரைவர் யார்? என்று விசாரணை நடைபெற்று வருகிறது.



