இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி வட்டம், தென்னவனூர் கிராமத்தில் இன்று குவைத் நாட்டில் தீ விபத்தில் மரணமடைந்த க.ராமு அவர்களின் உடலுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மாவட்ட வருவாய் அலுவலர் இரா.கோவிந்தராஜலு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவு இணங்க ரூ 5 லட்சம் நிவாரண உதவி தொகைக்கான காசோலை வழங்கினார். உடன் பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் செ.முருகேசன் உள்ளார்.



