நாகர்கோவில், ஜூன் 5 –
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மாவட்ட வன அலுவலர் மற்றும் வன உயிரின காப்பாளர் அன்பு தலைமையில், உதவி வன பாதுகாவலர் ஸ்ரீவல்சன் முன்னிலையில், அன்பழகன் வனச்சரக அலுவலர் ஏற்பாட்டில் வனச்சரக அலுவலர் வெங்கடேசன் மற்றும் வன பணியாளர்கள், இயற்கை தன்ஆர்வலர் சுதாமதி ரோஜாவனம் பள்ளி தாளாளர், முதல்வர், ஆசிரியர்கள் மற்றும் பள்ளி மாணவ, மானவிகள் இணைந்து தேரூர் குளக்கரையில் மரக்கன்றுகள் நட்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கு இயற்கை சுற்றுச்சூழலை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து தேரூர் குளத்தில் நெகிழிகளை பள்ளி மாணவ மாணவிகளை வைத்து வனவர்கள் அஷோக், பாலசந்திகா மேற்பார்வையில் அப்புறப்படுத்தப்பட்டது. மேலும் பள்ளி மாணவ, மாணவிகளுடன் வனத்துறை இணைந்து நாகர்கோயில் அட்டா மார்க்கெட் ஊழியர்களுடன் உலக சுற்றுச்சூழல் தினத்தை குறித்து பேரணி நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.



