தருமபுரி, மே 28 –
தருமபுரியில் உலக பட்டினி தினத்தையொட்டி தமிழ்நாடு முழுவதும் தவெக தொண்டர்கள் சார்பில் ஏழை, எளிய, ஆதரவற்றோர், முதியோர்களுக்கு உணவு வழங்க வேண்டும் என தவெக தலைவர் முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் தவெக தொண்டர்களுக்கு அறிவுறுத்தினார்.
இதனை தொடர்ந்து தருமபுரி மேற்கு மாவட்ட செயலாளர் தாபா. சிவன் தலைமையில் தருமபுரி தெற்கு ஒன்றிய தவெக சார்பில் ஒன்றிய செயலாளர் செந்தில்நாதன் ஏற்பாட்டில் தருமபுரி பிடமனேரியில் உள்ள வெங்கடேஸ்வரா மனவளர்ச்சி குன்றியவர்களுக்கன பள்ளியில் உள்ள மாணவர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் தருமபுரி மாவட்ட செயற்குழு உறுப்பினர் வித்யா, ஒன்றிய நிர்வாகிகள் நாகராஜ், இலக்கியம்பட்டி வெங்கடேஷ், அருள் பூவரசன், பரமசிவம், குனா, சுந்தரவேல், பிரகாசம் மற்றும் ஒன்றிய நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.



