தருமபுரி, ஜூன் 16 –
தருமபுரி மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் சார்பில் முதியோர்களுக்கு எதிரான கொடுஞ்செயல் எதிர்ப்பு தின உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகவளாகத்தில் உள்ள அதியன் கூட்ட அரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் சரவணன் தலைமை தாங்கி உறுதிமொழியை வாசிக்க அரசு துறை அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் பின் தொடர்ந்து வாசித்து உறுதி மொழியினை ஏற்றுக்கொண்டனர்.
தொடர்ந்து முதியோர்களுக்கு எதிரான கொடுஞ்செயல் எதிர்ப்பு தினத்தையொட்டி நடைபெற்ற கட்டுரை போட்டி, பேச்சுப்போட்டி மற்றும் ஓவிய போட்டி உள்ளிட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற தருமபுரி ஔவையார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, அதியமான் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் இலக்கியம்பட்டி அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளை சார்ந்த ஒன்பது மாணவ, மாணவிகளுக்கு கேடயங்களை ஆட்சியர் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா, சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் செல்வி, மாவட்ட வழங்கள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் கோவிந்தன், மாவட்ட சமூக நல அலுவலர் பவித்ரா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜோதி சந்திரா மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.



