சென்னை, நவ. 08 –
தமிழ்நாடு அரசு பொது நூலகத்துறை அலுவலர் ஒன்றியம் சார்பாக நூலகத் துறையில் நூலகங்களை தரம் உயர்த்தி ஊர்புற நூலகர்களுக்கு மூன்றாம் நிலை நூலகர் பதவி உயர்வு வழங்க கோரியும், கடந்த பத்தாண்டுக்கும் மேலாக ஊதிய உயர்வு கொடுக்காமல் இருப்பதையும் சுட்டிக்காட்டி சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கம் அருகில் ஒரு நாள் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு அரசு பொது நூலகத்துறை அலுவலர்கள் ஒன்றியம் மாநிலத் தலைவர் கோ. முத்துராமலிங்கம் தலைமையிலும் மாநில பொதுச்செயலாளர் கு. மணிமொழி செல்வன் முன்னிலையிலும் நடைபெற்ற இந்த உண்ணாவிரத போராட்டத்தில் தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் மாநிலத் தலைவர் த. அமிர்த குமார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு உரையாற்றினார் .
மேலும் இந்நிகழ்ச்சியில் சென்னை மாவட்ட தலைவர் சா. இளங்கோ, தமிழ்நாடு அரசு அலுவலர்கள், ஒன்றிய மாநில பொதுச் செயலாளர் இரா. அரவிந்தன், மாநில பொருளாளர் பழ.முத்துக்குமரன் மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்ட 1000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.



