திருப்பூர், செப். 20 –
இந்தியாவின் No.1 பர்னிச்சர் பிராண்டான ராயல் ஓக் பர்னிச்சர் பிரம்மாண்டமாக திருப்பூரில் உலக தரம் வாய்ந்த கலெக்ஷன்களுடன் தொடங்கியுள்ளது. இந்த பிரம்மாண்ட திறப்பு விழாவில் தமிழக தகவல் மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் மாண்புமிகு வெள்ளகோவில் சாமிநாதன், ராயல் ஓக் இன் கார்ப்பரேஷன்னின் தலைவர் விஜய் சுப்பிரமணியம், ஆர்ம்ஸ்டாங் மீட்டிங் மில்ஸ் தலைவர் பழனிச்சாமி, ஏற்றுமதியாளர் சங்கத்தின் பொதுச்செயலாளர் திரு குமரன், டெக்னோ ஸ்போர்ட்ஸ்வேர் பிரைவேட் லிமிடெட் நிர்வாக இயக்குனர் சுனில் ஜுன்ஜின் வாலா, தமிழக தியேட்டர் மற்றும் மல்டிபிளக்ஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் N. சுப்பிரமணியம், WTT பன்னாட்டு நிறுவனத்தின் தலைவர் D. சுப்பிரமணியம், BKS டெக்ஸ்டைல்ஸ்சின் தலைவர் M. செந்தில்குமார், திருப்பூர் யங் இந்தியன்ஸ் தலைவர் S. மோகன் குமார், திருப்பூர் ரவுண்டு டேபிள் தலைவர் தினேஷ் ஜெயின், திருப்பூர் லேடீஸ் சர்க்கிள் தலைவி திருமதி நேகா சன்ஷெட்டி, திருப்பூர் ஐ .வின். தலைவி திருமதி பிருந்தா, யூடியூப் மோகன் உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
திறப்பு விழாவில் பேசிய ராயல் ஒப் பர்னிச்சர் நிறுவனத்தின் தலைவர் திரு விஜய் சுப்பிரமணியம் தமிழ்நாட்டில் புதிய தோர் ஷோரூம் திறப்பதில் நாங்கள் பெருமைப்படுகிறோம். மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் 18 ஷோரூம்கள் என நாடு முழுவதும் 200 கடைகளுக்கு மேல் உள்ளன. இப்ப புதிய ஷோரூம் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான சேவை செய்வதற்கான எங்கள் அர்ப்பணிப்பையும், எங்கள் நம்பிக்கையும் பிரதிபலிக்கிறது. திருப்பூர் மக்கள் எங்களின் சர்வதேச பர்னிச்சர்கள் மலிவான விலையில் கிடைப்பதை மகிழ்ச்சியுடன் ஏற்று எங்களை ஆதரிப்பார்கள் என்று நம்புகிறோம்.



