திருப்பூர், மார்ச் 16-
மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் 72 பறக்கும் படை அதிகாரிகள் குழு, 22 நிலை கண்காணிப்பு குழு, 16 வீடியோ பதிவு குழுக்கள் என மொத்தம் 160 குழுக்கள் தேர்தல் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பொதுமக்கள்
சி. விஜில் ஆப் தேர்தல் தொடர்பான புகாரை பதிவு செய்யலாம். செல்போன் மூலமாக 24 x 7 செயல்படும் வகையில் டோல் பிரி எண் 1800 425 00 45 – ம், வாக்காளர் விபரம் அறிய 1950 எண்ணும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் இதுவரை ரூ.48.43 லட்சம் பணம் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு இடங்களில் சேலைகள், கட்சித்துண்டுகள், மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான மணிஸ் நாரணவரே செய்தியாளர்களிடம் பேட்டி.



