தஞ்சாவூர், ஜூலை 15 –
தஞ்சாவூர் பெரிய கோவிலில் உள்ள வராகி அம்மனுக்கு ஆண்டு தோறும் பத்து நாட்கள் ஆஷாட நவராத்திரி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் அம்மனுக்கு நாள்தோறும் மாலையில் அபிஷேகம் அலங்காரமும் நடைபெறும்.
அதன்படி இந்த ஆண்டுக்கான ஆஷாட நவராத்திரி விழா கணபதி ஹோமத்துடன் தொடங்கியது தொடர்ந்து சிறப்பு வராகி ஹோமம், சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். விழாவின் முதல்நாள்வராகி அம்மனுக்கு பல்வேறு வகையான இனிப்புகள் அலங்காரம் செய்ய ப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.
இதைத்தொடர்ந்து, வராகி அம்மனு க்கு மஞ்சள் அலங்காரமும், சந்தன அலங்காரமும், தேங்காய் பூ அலங்காரமும், மாதுளை அலங்காரமும், நவதானிய அலங்காரமும், வெண்ணை அலங்காரமும், கனிவகை அலங்காரமும், காய்கறி அலங்காரமும் செய்யப்படுகிறது. 23ம் தேதி வராகி அம்மனுக்கு புஷ்ப அலங்காரமும், இரவு கரகாட்டம், ஒயிலாட்டம், செண்டை மேளம், வாண வேடிக்கையுடன் 4 ராஜ வீதிகளிலும், உற்சவர்வீதி உலாவும் நடக்கிறது.
விழா ஏற்பாடுகளை அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா போன்ஸ்லே, உதவி ஆணையர் கார்த்திகேயன் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் செய்து வருகின்றனர்.



