தென்காசி, மே 2 –
தென்காசி மாவட்டம் சுரண்டையில் உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு சுரண்டை நகராட்சி பேருந்து நிலையம் முன்பு தென்காசி தெற்கு மாவட்ட திமுக சார்பில் தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் ஜெயபாலன் தலைமையில் 100 ஆட்டோ ஓட்டுநர்களுக்கு இலவச சீருடைகள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சிக்கு முன்னதாக தென்காசி சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் மருத்துவர் கலை கதிரவன் மற்றும் தெற்கு மாவட்ட திமுக செயலாளர் ஜெயபாலன் ஆகியோர் கலைஞர் கருணாநிதி படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில் ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள், அணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், கழக உடன்பிறப்புகள், ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு தொழிலாளர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.



