நாகர்கோவில், நவ. 4 –
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, குமரி மாவட்டத்தில் குளச்சல், பத்மநாபபுரம், கிள்ளியூர், விளவங்கோடு, நாகர்கோவில், கன்னியாகுமரி ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த கணக்கீட்டு படிவத்தை வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் வாக்குசாவடி நிலை அலுவலர்கள் வாக்காளர்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி இன்று தொடங்கியது. இதை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர். அழகுமீனா, நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் அவர் கூறியதாவது: கணக்கீட்டு படிவங்களை விரைவில் அனைத்து வாக்காளர்களின் வீடுகளுக்கு வழங்க வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் வாக்குசாவடி நிலை அலுவலர்களின் மேற்பார்வையாளர்கள், பொறுப்பு அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே கன்னியாகுமரி மாவட்டத்தில் வாக்குரிமை உள்ள அனைத்து வாக்காளர்கள் மற்றும் புதிய வாக்காளர்கள் தங்களை வாக்காளர் பட்டியலில் இணைத்து பயன்பெற கேட்டுக்கொள்கிறேன் என கூறினார்.
நடைபெற்ற ஆய்வில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெ. பாலசுப்பிரமணியம், பத்மநாபபுரம் சார் ஆட்சியர் தவினய்குமார் மீனா, நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் எஸ். காளீஸ்வரி, விளவங்கோடு சட்டமன்ற தொகுதி வாக்காளர் பதிவு அலுவலர் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் செந்தூர் ராஜன், கிள்ளியூர் சட்டமன்ற தொகுதி வாக்காளர் பதிவு அலுவலர் ஈஸ்வரநாதன், கன்னியாகுமரி அலுவலர் புஷ்பாதேவி, குளச்சல் அலுவலர் மோகனா, நகராட்சி ஆணையர்கள், வட்டாட்சியர்கள், வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள், துறை அலுவலர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.



