சுசீந்திரம், அக். 13 –
சுசீந்திரம் அருகே உள்ள மறுகால்தலையை சேர்ந்தவர் மகேஷ்வரன் (43) என்ஜினியர். இவரது அண்ணன் சுசீந்திரம் அருகே உள்ள சஞ்சீவிநகரை சேர்ந்த சுபாகரன் (45). இவர்களுக்கு இடையே முன் விரோதம் உள்ளது. இந்த நிலையில் சென்னையில் இருந்து மகேஷ்வரன் ஊருக்கு வந்தபோது சம்பவத்தன்று மகேஷ்வரன் வீட்டின் முன்பு நின்று கொண்டிருக்கும் பொழுது அவரது அண்ணன் சுபாகரன் அவதூறாக பேசி தாக்கியதோடு அரிவாளை காட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக கொடுத்த புகாரின் மீது நீதிமன்ற உத்தரவுபடி சுசீந்திரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பெனடிக்ட் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


