சுசீந்திரம், ஜீலை 18 –
சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் வருடம் தோறும் ஆடி முதல் நாள் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகமும் வாகனப் பவனி நடைபெறுவது வழக்கம். அதுபோல இன்று ஆடி முதல் நாள் என்பதால் இன்று மாலை 6 மணி அளவில் ரிஷப வாகனத்தில் சிவனும் கருட வாகனத்தில் பெருமாளும் அமரச் செய்து கோயில் உட்பிரகாரத்தில் மூன்று முறை வலம் வரும் ஸ்ரீ பலி வழிபாடு நடைபெறுகிறது. இதில் உள்ளூர் மட்டுமின்றி வெளியூர் பக்தர்களும் பெருமளவு கலந்து கொள்வார்கள்.
நேற்று பிரபல தெலுங்கு நடிகரும் ஆந்திரா துணை முதல்வர் பவன் கல்யாண் மைத்துனர் சாய் துர்காதேஜ் தாணுமாலயசுவாமி கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்திருந்தார். அவரை கோவில் ஊழியர்கள் வரவேற்றனர். பின்பு தாணுமாலய சுவாமி ஆஞ்சநேயர் சுவாமி உட்பட சுவாமிகளை தரிசனம் செய்தார். பின்பு கல்லில் செதுக்கப்பட்ட இசை தூண்களை இசைக்க செய்து கேட்டார். கோயில் உட்பிரகாரம் உள்ள கோவில் வரலாறு கோவில் ஊழியர்கள் விளக்கி கூறினர். பின்பு சாமிதரிசனம் செய்துவிட்டு அங்கிருந்து சென்றார்.


