By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சட்ட விரோத கல் குவாரி குறித்து அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்ததால் கொலை மிரட்டல்; போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் மனு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தருமபுரி > சட்ட விரோத கல் குவாரி குறித்து அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்ததால் கொலை மிரட்டல்; போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் மனு
தருமபுரி

சட்ட விரோத கல் குவாரி குறித்து அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்ததால் கொலை மிரட்டல்; போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் மனு

Last updated: October 16, 2025 4:45 pm
October 16, 2025
9 Views
Share
SHARE

தருமபுரி, அக். 16 –

சட்ட விரோத கல் குவாரி குறித்து அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்ததால் கொலை மிரட்டல் விடுக்கிறார்கள் என்று தருமபுரி மாவட்டம் போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. தருமபுரி டீச்சர்ஸ் காலனியைச் சேர்ந்தவர் மனோ என்கிற மாரியப்பன் நேற்று தருமபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்வரனிடம் ஒரு புகார் மனு கொடுத்தார்.

அந்த புகார் மனுவில் கூறியுள்ளதாவது: நான் எனது சகோதரி ஆனந்தி, மாமா ராஜேஷ் ஆகியோரது குடும்பத்தினருடன் வசித்து வருகிறேன். எனது சகோதரிக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். இந்த நிலையில் 14-ம் தேதி அதிகாலை காரில் வந்த ஒரு சிலர் எனது சகோதரியின் வீட்டு கேட்டை உடையும் அளவிற்கு தட்டிக் கொண்டிருந்தனர். மேலும் கெட்ட வார்த்தைகளால் யாருடா? வீட்டில் உள்ளது வெளியே வாருங்கள் என்று சத்தம் போட்டனர். அப்போது நான் வெளியே வந்து பார்த்தபோது ஓமலூர் பகுதியைச் சேர்ந்த குவாரி உரிமையாளர் உத்திரசாமி என்பவரும், ஒரு சில போலீசாரும் இருந்தனர். வீட்டிலிருந்து உங்கள் மாமாவை வெளியே வர சொல், இல்லையென்றால் நடப்பதே வேறு என்று என்னை மிரட்டினார்கள்.

இது பற்றி தகவல் தெரிவித்து எங்களது வழக்கறிஞரை உடனடியாக வர சொன்னோம். அவர் வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தவர்களிடம் ராஜேஷ் ஊரில் இல்லை, நீங்கள் யார் என்று கேட்டார். நான் சட்டத்துக்கு புறம்பாகவும், அனுமதி இல்லாமலும் நான் நடத்தி வரும் குவாரி குறித்து அதிகாரிகளுக்கு தகவல் சொன்ன உனது மாமாவை கொலை செய்து விடுவோம். உங்களால் என்ன முடியுமோ அதை செய்யுங்கள், என்னை ஒன்றும் செய்ய முடியாது, வழக்குப்பதிவு செய்யாமலேயே போலீசாரை அழைத்து வந்துள்ளேன் என்று மீண்டும் வீட்டின் கதவை தள்ளிக் கொண்டு உள்ளே நுழைய முயன்றனர். அதிகாலையில் நடந்த இந்த சம்பவத்தால் அக்கம் பக்கத்தினர் பதட்டம் அடைந்து விட்டனர்.

மேலும் வீட்டில் இருக்கும் பெண்களையும் தரக்குறைவாக பேசி மிரட்டினர். நாங்கள் அவர்களை உள்ளே நுழைய விடாததால் சிறிது நேரம் கழித்தவுடன் அவர்கள் சென்று விட்டனர். எனவே எனது மாமாவை கொலை செய்து விடுவேன் என்று மிரட்டிய சட்ட விரோத குவாரி நடத்தி வரும் ஓமலூர் பகுதியைச் சேர்ந்த உத்தரசாமி மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம். மேலும் வழக்கு பதிவு ஏதும் செய்யாமல் தன்னிச்சையாக எங்கள் வீட்டுக்கு வந்த போலீசார் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம் என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

தருமபுரி நகராட்சிக்குட்பட்ட நூலகம் மற்றும் அறிவுசார்
ஜெ. ஜெயலலிதாவின் 8-ஆம் ஆண்டு நினைவு தினத்தை
அதிமுக சார்பில் அன்னதானம் வழங்கும் விழா
புதிய நிர்வாகிகளை இணைக்கும் விழா
தருமபுரியில் மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் ஷோரூம் திறப்பு விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தருமபுரிமாவட்டம்

தருமபுரி மாவட்டத்தில் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து சட்டமன்ற பேரவை மதிப்பீட்டு குழுவினர் ஆய்வு நடத்தினர்.

May 23, 2025
33 Views
மதுரை மாவட்டத்தில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்று திறனாளிகள் குடும்ப அட்டைதாரர்கள் தங்களது சார்பில் பொருட்களைப் பெறுவதற்கு ஆதார் அட்டை பெற்றுள்ள அவர்களின் உறவினர் உள்ளிட்டோரை நியமனம் செய்து அவர்கள் மூலம் பொருட்களைப் பெற்றுக் கொள்ளலாம் மாவட்ட ஆட்சியர் தகவல்
தஞ்சாவூர் மாவட்டத்தில் சமூகநீதி கல்லூரி மாணவ, மாணவியர் விடுதி அடிக்கல் நாட்டு விழா
பட்டா இடத்தை ஆக்கிரமிப்பு செய்த அரசு பணியாளர் மீது நடவடிக்கை எடுக்க மனு
மாநில அளவில் இறகு பத்து போட்டி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account