தருமபுரி, அக். 4 –
உலகின் சில்லறை நகை விற்பனையில் வேகமாக வளர்ந்து வரும் முன்னணி நிறுவனமும் இந்தியாவில் பல்வேறு துறைகளில் கால் பதித்து தனது வர்த்தகத்தை விரிவாக்கி கொண்டுள்ள மலபார் குழுமத்தின் முன்னோடி நிறுவனமான மலபார் கோல்டு & டை மண்ட்ஸ் நிறுவனம் தரும புரியில் 4 ரோடு அருகில் அதியமான் பேலஸ் ஹோ ட்டல் எதிரில் பிரம்மா ண்டமான ஷோரூம் திறப்பு நடைபெற்றது. இந்த ஷோரூமில் அதிக மான இடவசதி, புதிய மாடல்கள் மற்றும் டிசைன் களில் தங்கம், வைரம்,மற்றும் வெள்ளி, நகைகளின் கலெக்சன்கள் ஆகியவை இடம் பெற்றுள்ளன.
இந்த ஷோரூமை தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.மணி திறந்து வைத்தார். பிறகு ஷோரூமை பார்வையிட்டு முதல் விற்பனையை துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தடங்கம் சுப்பிரமணி, நகர செயலாளர் நாட்டான் மாது, ஒன்றிய செயலாளர் காவேரி, தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேஸ்வரன், மலபார் கோல்ட் டைமண்ட் தமிழ்நாடு மண்டல தலைவர் யாசர், வணிக தலைவர் சபீர் அலி , மலபார் கோல்ட் மேற்கு மண்டல டைமண்ட்ஸ் தமிழ்நாடு தலைவர் நெளசாத், தருமபுரி கிளை தலைவர் மனு நாயர் மற்றும் மேலாண்மை உறுப்பினர்கள் கிளை ஊழியர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.
இந்த ஷோரூமில் திறப்பு விழா சலுகையாக ஒவ்வொரு முறை தங்கம் வாங்கும் போதும், வெள்ளி நாணயம் இலவசமாக வழங்கப்படுகிறது. இந்த சலுகை வரும் 10-ஆம் தேதி வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது. மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் தற்போது 14 நாடுகளில் 410 -க்கும் மேற்பட்ட சில்லறை விற்பனை நிலையங்களுடன் உலகில் மிகப்பெரிய நகை விற்பனை நிறுவனமாக உருவெடுத்துள்ளது. தமிழ்நாட்டில் சென்னை, சேலம், ஈரோடு, ஓசூர் உள்பட 32 கிளைகளைக் கொண்டு இந்நிறுவனம் இயங்கி வருகிறது.



