மார்த்தாண்டம், ஜூன் 28 –
கொல்லங்கோடு அருகே அடைக்காக்குழி பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (65). ஜூன் 23 அன்று இரவு சுமார் 8:15 மணியளவில் ராஜேந்திரன் கடைக்கு செல்வதற்காக வீட்டில் இருந்து புறப்பட்டார். செங்கவிளை – ஊரம்பு சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத நபர் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் திடீரென ராஜேந்திரன் மீது மோதி விட்டு சென்றது. படுகாயமடைந்த ராஜேந்திரன் திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ராஜேந்திரன் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார்கள். இது குறித்த புகாரின் பேரில் கொல்லங்கோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து ராஜேந்திரன் மீது மோதி விட்டு நிற்காமல் சென்ற பைக்கை ஓட்டி வந்த நபரை தேடி வருகின்றனர்.


