புதுக்கடை, பிப். 9 –
புதுக்கடை அருகே உள்ள குஞ்சாகோடு பகுதியை சேர்ந்தவர் ஞானசெல்வம் (60). இவர் கடந்த 6 ம் தேதி மாலை அந்தப் பகுதியில் உள்ள நாகர்குளம் அருகே உள்ள ஒரு வாய்க்காலில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு வாலிபர்கள் திடீரென குளித்துக் கொண்டிருந்த ஞான செல்வத்தின் கழுத்தில் கிடந்த 5 பவுன் தங்கச் சங்கிலியை பார்த்துக்கொண்டு மின்னல் வேகத்தில் மாயமானார்கள். இது குறித்து ஞானசெல்வம் புதுக்கடை போலீசில் புகார் செய்தார்.
இந்த திருட்டு தொடர்பாக புதுக்கடை காவல் ஆய்வாளர் மாடசாமி தலைமையில் உதவி ஆய்வாளர் கார்த்திக் உள்ளிட்ட தனிப்படை பிரிவு போலீசார் இணைந்து செயின் திருடிய குற்றவாளிகள் குறித்து தேடி வந்தனர்.
இந்த நிலையில் முஞ்சிறை பகுதியில் நேற்று இரவு சந்தேகத்தின் பெயரில் இருவர் கைது செய்யப்பட்டனர். போலீஸ் விசாரணையில் இந்த 2 பேரும் குஞ்சாகோட்டில் மூதாட்டியிடம் செயின் பறிப்பில் ஈடுபட்டவர்கள் என தெரிய வந்தது. தொடர்ந்து போலீஸ் நிலையம் வந்து விசாரித்ததில் இந்த வாலிபர்கள் கேரளா மாநிலத்தை சேர்ந்த ஸ்ரீ குமார் (40 ) அனுமோகன் (48) என்ற அண்ணன் தம்பிகள் என தெரியவந்தது.
தொடர்ந்து போலீசார் அவர்கள் திருடிய 5 பவுன் சங்கிலியையும் மீட்டு வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் டுத்தி சிறையில் அடைத்தனர். திருட்டு போன மூன்று நாட்களில் திருடர்களை கைது செய்த போலீசாரை பொதுமக்கள் பாராட்டினார்.



