சென்னை, ஆகஸ்ட் 27 –
இந்து அதிரடிப்படை சார்பாக வினாயக சதூர்த்தியை முன்னிட்டு இந்து அதிரடிப்படை சார்பாக சென்னையில் பல பகுதிகளில் பொது மக்களுக்கு 1008 பிள்ளையார் சிலைகள் வழங்கும் நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக எம்.ஜி .ஆர் நகர் அண்ணா பிரதான பிரதான சாலையில் நடைபெற்றது.
இந்து அதிரடிப்படை தலைவர் ராஜகுரு ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில்
பாரத் இந்து முன்னணி தலைவர் பிரபு, இந்து மக்கள் கட்சி பொதுச் செயலாளர் பாரதமாதா செந்தில், அனைத்து இந்து மக்கள் பேரவை தேசியத் தலைவர் காவிப்புலி பாபா ராமதாஸ் சிவசேனா மாநில துணைத்தலைவர் கர்ணன், மாநில இளஞரணி செயலாளர் மாரி அதிசிவ சோழர் புலிப்படை தலைவர் ஓம் ஸ்ரீலா சிவபாலன் மு. தென்னூரன் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் 100க்கும் மேற்பட்டோர் பிள்ளையார் சிலைகளை பெற்று சென்றனர்.
மேலும் ராஜகுரு செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: சென்னையில் வினாயக சதுர்த்தி விழாவை கொண்டாடுவதற்கும், சிலை அமைப்பதற்கும் கடும் நிபந்தனைகளை காவல்துறை விதிக்கிறது. சென்னையில் வழக்கமாக 20 ஆண்டுகளுக்கும் மேல் அனுமதியுடன் அமைக்கப்பட்ட இடங்களுக்கு இந்த ஆண்டு அனுமதி மறுக்கப்படுகிறது.
இது போன்ற எதேச்சதிகார போக்கை இந்து அதிரடிப்படை மற்றும் பிற தோழமை இந்து அமைப்புகளும் கண்டிக்கிறது என்றார்.



