களியக்காவிளை, ஜூலை 25 –
தமிழ்நாடு, சிவசேனா கட்சி தலைவர் கார் கண்ணாடி நள்ளிரவில் உடைத்த நபரை போலீசார் தேடி வருகின்றனர். களியக்காவிளை அருகே ஜங்காமம், செறுகோடு பகுதியை சார்த்தவர் ரமேஷ் குமார் (45). இவர் தமிழ்நாடு சிவ சேனா கட்சியின் மாநில தலைவராக உள்ளார். இவருக்கும் ஐங்காமம் கல்குளம் கரை பகுதியை சார்ந்த சுகுமாரன் மகன் ராஜேந்திரன் என்பவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த முன்விரோதம் காரணமாக ரமேஷ் குமார் காரை நள்ளிரவில் கல்லால் அடித்து கார் கண்ணாடியை சேதப்படுத்தியுள்ளார். இது தொடர்பாக ரமேஷ்குமார் களியக்காவிளை போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


