By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கேரள மாநிலத்தைச் சேர்ந்த தம்பதியினரை தமிழக போக்குவரத்து புலனாய்வு போலீசார் அலைக்கழிப்பதாக குற்றச்சாட்டு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கோயம்புத்தூர் > கேரள மாநிலத்தைச் சேர்ந்த தம்பதியினரை தமிழக போக்குவரத்து புலனாய்வு போலீசார் அலைக்கழிப்பதாக குற்றச்சாட்டு
கோயம்புத்தூர்தமிழ்நாடு

கேரள மாநிலத்தைச் சேர்ந்த தம்பதியினரை தமிழக போக்குவரத்து புலனாய்வு போலீசார் அலைக்கழிப்பதாக குற்றச்சாட்டு

Last updated: May 20, 2026 5:16 pm
May 20, 2026
36 Views
Share
SHARE

கோவை, மே 20 –

கேரள மாநிலத்தைச் சேர்ந்த தம்பதியினரை தமிழக போக்குவரத்து புலனாய்வு போலீசார் அலைக்கழிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தைச் சேர்ந்த விபின் ஜோஸ், அவரது மனைவி அனு மற்றும் இரு குழந்தைகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை பெங்களூரு செல்லும் நோக்கில் கோவை வழியாக காரில் பயணம் மேற்கொண்டனர். அப்போது பட்டணம் புதூர் அருகே பாலக்காடு பைபாஸ் சாலையில் சென்று கொண்டிருந்தபோது, ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த டிரக் ஒன்று அவர்களது காரின் பின்புறத்தில் மோதி விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, கோவை கிழக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவில் தம்பதியினர் புகார் அளித்துள்ளனர். ஆனால், புகாரை பெற்ற போலீசார் உடனடியாக சி.எஸ்.ஆர் வழங்காமல் இழுத்தடித்ததாக அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இதுகுறித்து விபின் ஜோஸ் கூறுகையில், “கேரளாவில் ஆன்லைனில் புகார் அளித்தாலே உடனடியாக சி.எஸ்.ஆர் கிடைத்து விடுகிறது. ஆனால் தமிழகத்தில் காவல் துறையினர் ‘சி.எம் பதவியேற்பு பணி உள்ளது’ என கூறி எங்களை அலைக்கழித்தனர்” என்றார். மேலும், அனு கூறுகையில், “விபத்துக்குப் பிறகு கோவை கிழக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவில் புகார் அளித்தோம். அதன்பின்னரும் சி.எஸ்.ஆர் வழங்க தாமதம் செய்தனர். அதனால் பயத்துடன் பெங்களூரு சென்றோம். பின்னர் காப்பீட்டு நடவடிக்கைக்காக சி.எஸ்.ஆர் தேவைப்பட்டதால் மீண்டும் காவல் நிலையத்திற்கு சென்றபோது கூடுதல் ஆவணங்கள் கேட்டனர். அவற்றையும் கொடுத்த பிறகு மதியம் 1.15 மணி முதல் இரவு 9 மணி வரை குழந்தைகளுடன் காவல் நிலையத்தில் காத்திருந்தோம். ஆய்வாளர் இல்லாததால் திங்கட்கிழமை வந்து வாங்கிக்கொள்ளுமாறு கூறினர்.

பின்னர் நண்பர்கள் சென்றபோதும் சி.எஸ்.ஆர் வழங்காமல், நாங்களே நேரில் வர வேண்டும் என கூறினர். இன்று நேரில் வந்து தான் சி.எஸ்.ஆர் பெற்றுக்கொண்டோம்” என்றார்.

மேலும், “கேரளாவில் ஆன்லைனில் புகார் அளித்தாலே உடனடியாக ஆவணம் கிடைக்கும் நிலையில், தமிழக போக்குவரத்து புலனாய்வு போலீசார் எங்களை தேவையில்லாமல் அலைக்கழித்ததை வன்மையாக கண்டிக்கிறோம்” என்றும் தெரிவித்தார். இந்த சம்பவம் தொடர்பாக தமிழக அரசு மற்றும் காவல்துறை உயரதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட தம்பதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

பொய்கை காட்டில் வேட்டைக்கு சென்ற இருவருக்கு தலா ரூ.50 ஆயிரம் வீதம் அபராதம்: வனத்துறை நடவடிக்கை
திருமணம் ஆகாத விரக்தியில் இளைஞர் தூக்கு போட்டு தற்கொலை
பெண்களின் போராட்டம் எதிரொலி: டாஸ்மாக் கடை அகற்றம்
குமரி முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் விடிய விடிய அதிரடி சோதனை
திருப்பூர் மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து குப்பைக்குள் இறங்கி திமுக எம்எல்ஏ போராட்டம்!! பொதுமக்களும் திரண்டதால் பரபரப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரைமாவட்டம்

போக்குவரத்து கழகம் 20 புதிய தாழ்தள பேரூந்துகளை

October 19, 2024
77 Views
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் படி 1.01.2025ஐ தகுதி ஏற்பு
மேகதாதுவில் காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும்: பா ம க பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம்
சிவ பக்தர்களுக்கு தமிழக வெற்றி கழகத்தினர் அன்னதானம்
கேரள அருட் சகோதரிகள் சட்டிஸ்கரில் சிறை; குளச்சலில் மீனவர்கள் போராட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account