நாகர்கோவில், ஏப். 30 –
காவல்துறையில் பணிபுரிந்து இந்த மாத இறுதியில் ஓய்வில் செல்லவிருக்கும் 4 உதவி ஆய்வாளர்கள், 4 சிறப்பு உதவி ஆய்வாளர்கள் மற்றும் அவர்களுடைய குடும்ப உறுப்பினர்களுடன் மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் கலந்துரையாடினார். அதன்படி பணியில் சிறப்பாக செயல்பட்டு தங்களது பணியை நிறைவு செய்யும் அனைவரையும் பாராட்டி சான்றிதழ் மற்றும் வாழ்த்து மடல்களை வழங்கி கௌரவித்தார்.
காவல்துறையில் நேர்மையுடனும், அர்ப்பணிப்புடனும் பணியாற்றி ஓய்வுபெறும் உங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள். பணி ஓய்விற்குப் பின், நீங்கள் உங்கள் குடும்பத்துடன் ஆரோக்கியமாகவும், மகிழ்ச்சியாகவும், சகல வளங்களுடனும் வாழ என்னுடைய இதயப்பூர்வமான நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என கூறினார்.



