குளச்சல், ஏப். 1 –
மண்டைக்காடு அருகே புதூர் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். கடலில் மீன்பிடி தொழில் செய்து வருகிறார். இவரது மகள் அசினா (19). அந்தப் பகுதியில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2 ம் ஆண்டு படித்து வருகிறார்.
கடந்த 28ம் தேதி தனது தோழியை பார்த்துவிட்டு வருவதாக வீட்டில் கூறிவிட்டு சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை. அவரைப் பெற்றோர் பல இடங்களில் தேடியும் எந்த தகவலும் கிடைக்கவில்லை.
இது குறித்து மனைவியின் தாயார் குளச்சல் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான மாணவியை தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று தனது ஊரை சேர்ந்த காதலன் ஷாஜன் (23) என்பவருடன் குளச்சல் போலீசில் மாணவி அசினா தஞ்சமடைந்தார்.
உடனே போலீசார் இருவரின் பெற்றோர்களுக்கு தகவல் தெரிவித்து, காவல் நிலையம் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் மாணவி காதலனுடன் செல்வதாக உறுதியாக இருந்தார். இதை அடுத்து போலீசார் மாணவிக்கு அறிவுரை வழங்கி காதலனுடன் அனுப்பி வைத்தனர்.



