நாகர்கோவில், செப். 27 –
குமரி மாவட்டத்தில் கடந்த இரு நாட்களாக இரவு பகலாக தொடர் மழை பெய்து வருகிறது. குறிப்பாக மேற்கு மலையோர பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக இங்குள்ள அணைகள் மட்டும் ஆறுகளில் தண்ணீரின் வரத்து அதிகரித்து வருகிறது.
கோதையாற்றில் தண்ணீரின் வரத்து அதிகரித்து ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் திற்பரப்பு அருவியிலும் தண்ணீர் ஆக்ரோஷமாக கொட்டி வருகிறது. இதனால் இங்கு வரும் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க திற்பரப்பு பேரூராட்சி நிர்வாகம் சார்பில் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அருவியை சுற்றி தடுப்பு வேலிகள் அமைத்து காவலாளிகள் கண்காணித்து வருகின்றனர்.



