கன்னியாகுமரி, 15.08.2026
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே, அழிந்து வரும் ஓவியக் கலையை பாதுகாக்க வலியுறுத்தி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 66 அடி உயரம், 60 அடி அகலத்தில் தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் உருவப்படம் வரையப்பட்டது.
139 ஓவியப் பயிற்சி மாணவர்கள் மற்றும் 10 ஆசிரியர்கள் இணைந்து, இந்த பிரம்மாண்ட ஓவியத்தை வெறும் 5 மணி நேரத்தில் வரைந்தனர். பள்ளிகளில் மீண்டும் ஓவியப் பாடத்தை கொண்டுவர வேண்டும், ஓவிய ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது.



