கன்னியாகுமரி, ஆகஸ்ட் 26 –
விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு என் உளமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். வினைகள் தீர்க்கும் விக்னேஸ்வரன் நமது வினைகளை போக்கி நல்ல தொடக்கங்களுக்கு அருள் புரிவாராக. அறிவும், அறிவுறுத்தலும், வெற்றியும் அருள்புரியும் விநாயகப் பெருமான் நம்மை எல்லாம் நல்லெண்ணப் பாதையில் நடத்தும் வழிகாட்டியாக விளங்குவாராக.
இந்த புண்ணிய நாளில் அனைவரின் இல்லங்களிலும் அமைதி, ஆரோக்கியம், செழிப்பு மலர வேண்டும் என்று நான் இறைவனை வேண்டுகிறேன். எந்த இடரையும் அகற்றி
மனங்களில் மகிழ்ச்சியை வளர்த்து சமூகத்தில் ஒற்றுமை, அன்பு, சமாதானம் நிலைத்திருக்க விநாயகர் பெருமான் அருள் புரியட்டும்.
எல்லோரும் இணைந்து வாழும் நல்ல சமூகமே நமது பலம். இந்த நாளில் நாமும் ஒற்றுமையோடு முன்னேறுவோம். விநாயக சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்.



