சேலம், ஜூலை 8 –
கிறிஸ்தவ தேவாலயங்களில் பணிபுரிந்து வரும் உபதேசியர்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில்பதிவு செய்த உறுப்பினர்களுக்கு விபத்து ஈட்டு உறுதி திட்டத்தின் கீழ் உதவி தொகை, இயற்கை மரணத்திற்கான உதவி தொகை, திருமண உதவித் தொகை, மகப்பேறு உதவித்தொகை, மூக்கு கண்ணாடி செலவு தொகை (ஈடு செய்தல்), முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நலத்திட்ட உதவிகளை பெற கிறிஸ்தவ இனத்தை சேர்ந்த 18 வயது முதல் 60 வயது வரை உள்ளவர்கள் கிறிஸ்துவ தேவாலயங்களில் பணியாற்றி வரும் உபதேசியர்கள், வேதியர்கள், சேஷப் பிள்ளைகள், பாடகர்கள், கல்லறைப் பணியாளர்கள், கிறிஸ்தவ அனாதை இல்லங்கள், தொழு நோயாளர் மறுவாழ்வு இல்லங்களில் பணி புரியும் பணியாளர்கள், முறையான மாதாந்திர ஊதியம் இல்லாத பணியாளர்கள் இந்த நல வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்து நலத்திட்ட உதவிகள் பெற தகுதி பெற்றவர்கள்.
இந்த நலவாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்து நலத்திட்ட உதவிகள் பெறுதலை எளிதாக்கும் வகையில் www.cwb.tn.gov.in என்ற பிரத்யேக இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இணையதளம் மூலம் தகுதியுடையவர்கள் விண்ணப்பம் செய்து பயன்பெறுமாறு சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் இளம் பகவத் கூறினார்.


