கிருஷ்ணகிரி, ஜூன் 26 –
பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை அவர்களின் கரத்தை வலுப்படுத்தும் நோக்கில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சி.ரசிம்மன் தலைமையில் மோதிலால்தேசிங், ஜவகர்காந்தி, ஜித்தேஷ் ஆகியோர் முன்னிலையில், கிருஷ்ணகிரியை அடுத்த குந்தாரப்பள்ளி கூட்ரோடு அருகே வி தி லீடர்ஸ் சார்பில் தீவிர உறுப்பினர் சேர்க்கை முகாம் வெகு சிறப்பாக நடைபெற்றது.
வெள்ளிக்கிழமை ஆன இன்று 100 கிராம மக்கள் கூடும் முக்கிய சந்தை நாளில், காலை முதல் மாலை வரை இந்த உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. சுமார் 500க்கும் மேற்பட்டோர் தங்களை இந்த இயக்கத்தில் இணைத்துக் கொண்டனர். இயக்கத்தில் இணைந்த அனைவருக்கும் காய்கறி விதை மற்றும் கீரை விதைகள் வழங்கப்பட்டது.
மாறுவோம் மாற்றுவோம் என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த உறுப்பினர் சேர்க்கை முகாமில் கிருஷ்ணகிரி சாந்தி மன்னன் சிவா ஆகியோர் கலந்து கொண்டனர். இறுதியாக ராஜேந்திரன் நன்றியுரை ஆற்றினார்.



